யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்

0 0
Read Time:1 Minute, 22 Second

யாழ். மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம்.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் நீதவான் சதீஸ்கரன் மணிவண்ணனை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

மணிவண்ணனுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட 20 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறையால் பதிவு செய்ய்யப்பட்ட வழக்கு, விசாரணைகளின் பின்னர், சாதாரண குற்றவியல் சட்டத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment